Medicine for piles...
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNgWTsLeS8E6me8Hn6jI8BXZUjvMA1-6hf3btp41yTxkjD5FpaVS0aAjiUdr0aMUE5s2Q7z_IY6OS0K5DM3fBRYjD__pNlQqI3hfD3AmUPhPlG0fF-gh1jMV0E-_MgYkDRUSDKqkII8sqW/s1600/FB_IMG_1495652731242.jpg)
மூல நோய் நீங்கிட... ---------------------------------- மூலநோய் அறுவை சிகிச்சைக்கு பின்பும் மீண்டும் வர வாய்ப்பு உண்டு. எந்த வகை மூலநோயாக இருந்தாலும் ... எங்கும் சாதாரணமாக காணப்படக்கூடிய துத்தி இலைகளை நன்கு அலசி எடுத்து துவரம்பருப்பு சேர்த்து வேகவைத்து கீரை சைமைப்பதுபோல் செய்து தினசரி மதியம் சாப்பாட்டுடன் சாப்பிட்ட வேண்டும். காலை ,மாலை துத்திஇலையை அரைத்து ஒரு நெல்லி காய் அளவு விழுங்கிவிட்டு மோர் குடிக்கவேண்டும். துத்திஇலையை ஆமணக்கு எண்ணையில் வதக்கி அதை சூடு ஆறினதும் ஆசனவாயில் வைத்து கட்டி அதன் மேல் இன்னொரு துணியை லங்கோடு கட்டிக்கொண்டு இரவு உறங்கவும். காரமான உணவு தவிர்க்கவும். வாரம் ஒருமுறை ஆயில் பாத் செய்யவும். மேற்கண்டவாறு தொடர்ந்து 40 நாட்கள் செய்துவர மூலநோய் குணமாகும்.